Published : 08 Oct 2023 07:47 AM
Last Updated : 08 Oct 2023 07:47 AM

ப்ரீமியம்
சுயமரியாதையின் பிறப்பிடம் சன்மார்க்கமா?

உலகிலுள்ள அத்தனை அகராதிகளை யும் எடுத்துப் போட்டுப் புரட்டினா லும்கூட சுயமரியாதை என்னும் சொல்லுக்கு ஈடாக வேறு எந்த ஒரு சொல்லையும் கண்டுபிடிக்க முடியாது என்றார் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன் என்று 1937இல் ‘குடிஅரசு’ இதழில் எழுதும்போது, ஜாதி மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்கிற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கிற கருத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன் என்கிறார்.

இந்தக் கொள்கைகளை உடைய பெரியார்தான் வள்ளலாரை அவருடைய சீர்திருத்தக் கருத்துகளுக்காக ஆதரித்தார். ‘சாதியிலே மதங்களிலே அலைந்தலைந்து அழியாதீர்’ என்ற பாடிய வள்ளலாரின் ஆறாம் திருமுறையைத் தன்னுடைய பதிப்பகத்திலேயே குறைந்த விலையில் பதிப்பித்துப் பரப்பினார் பெரியார். வள்ளலாரின் சன்மார்க்கக் கோட்பாடு என்பது சர்வ சித்தி உடைய கடவுளை வழிபாடு செய்து அருளைப் பெறவேண்டும் என்பது. திருவிகவின் சன்மார்க்கத்தில் கிருஷ்ணனும் உண்டு; கிறிஸ்துவும் உண்டு; புத்தரும் உண்டு; நபியும் உண்டு. வழிபாடு என்பது சன்மார்க்கத்திற்கு இன்றியமையாதது என்று தன்னுடைய ‘சமரச சன்மார்க்கத் திறவு’ நூலில் திருவிக குறிப்பிடுகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x