Last Updated : 05 Oct, 2023 06:16 AM

 

Published : 05 Oct 2023 06:16 AM
Last Updated : 05 Oct 2023 06:16 AM

ப்ரீமியம்
சமத்துவக் குரலின் நவீன வடிவம்

ராமலிங்கம் எனும் வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள் (1823-2023) நிறைவடைந்துவிட்டன. வள்ளலார் பிறந்து செயலாற்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகம், பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை எதிர்கொண்ட காலப்பகுதி ஆகும். இன்றைய நவீனத் தமிழரசியலின் தோற்றுவாய்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியவைதாம். சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்திய அந்நூற்றாண்டில், சமய வாழ்விலிருந்து சமூக மாற்றத்துக்கான நுழைவாயிலைத் திறந்துவைத்தவர் வள்ளலார்.

சமயமும் சடங்கும்: இந்திய நெறியின் சமயக் கண்ணோட்டம் மனித வாழ்வின் அறவியல் பரிமாணத்தைத் தொடக்கக் காலத்தில் கொண்டிருந்தது. இயற்கையின் புதிர்களோடு தொடர்புடைய கடவுளர்கள் சமூக வாழ்வினை நிர்மாணிக்கும் நிலையிலிருந்து, சடங்குகளின் மேலாதிக்கம் தலைதூக்கத் தொடங்கிய காலப்பகுதியில், அதன் அறவியல் பரிமாணத்தை இழந்துவிட்டது. சடங்குகள் எனப்படுபவை கெட்டிதட்டிப்போன சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பாதுகாக்கும் மரபுகளாக, ஆதிக்க நடைமுறைகளாக மாறிவிட்டன. மனிதனுக்கான சமயம் எனும் நிலையிலிருந்து, சமயத்துக்காக மனிதன் என்பதாகக் கீழிறங்கிவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x