Published : 20 Aug 2023 08:32 AM
Last Updated : 20 Aug 2023 08:32 AM
நான் கல்லூரிப் படிப்பு முடிந்து முழுச் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருந்தேன். காடு, ஆறு, வயல், வரப்புகளில் புத்தகங்களுடன் திரிந்தேன். நகர நூலகத்தில் கைக்குக் கிடைத்தவற்றைப் படித்தேன். யாரெனத் தெரியாமலே புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன் போன்றவர்களை அடைந்தேன். பல வண்ண இதழ்களின் நடுவில் ‘கணையாழி’ இதழ் வித்தியாசமாயிருந்தது. அதன் வாசிப்பு அனுபவம் ஆழமாயிருந்தது.
எனக்குக் கால் கட்டுப் போட, வேலைக்கு அனுப்ப வீட்டார் விரும்பினார்கள். உறவினர் ஒருவர் தோல் தொழிற்சாலைக்குப் பரிந்துரைத்தார். காலை ஒன்பதிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை கணக்காளர் வேலை. பேருந்தில் சென்று சில கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். வழியில் தோல் தொழிற்சாலைகள் செறிந்த இடத்தில் தொடர்பில்லாமல் புறாக் கூண்டு நின்றிருந்தது. பரபரப்பின் நடுவில் புறாக்கள் அமைதியாக அமர்ந்தும் பறந்தும் கொண்டிருந்தன. தொழிற்சாலையில் கணக்கெழுதுவது குறைவு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT