Published : 06 Aug 2023 07:59 AM
Last Updated : 06 Aug 2023 07:59 AM

ப்ரீமியம்
ஒளிரும் பல்லவ ஓவியம்

பல்லவப் பேரரசன் ராஜசிம்மன் எனும் இரண்டாம் நரசிம்மவர்மன் (பொ.ஆ. (கி.பி.) 690-728) கலை வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற மூன்று கற்றளிகளை வெவ்வேறு நிலப்பரப்புகளில் எழுப்பினார்; மாமல்லபுரக் கடற்கரையில் ஒன்று, பனைமலை குன்றின் மேல் தாளகிரீஸ்வரர் கோயில், கடைசியாக காஞ்சி வயல்வெளியில் கைலாசநாதர் கோயில்.

இந்த ஆலயங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில், அவற்றிலுள்ள சிற்பங்கள் மீது சுதைச் சிற்பங்கள் உள்பட, வண்ணம் பூசப்பட்டிருந்தது. காலப்போக்கில் இந்த வண்ணங்கள் அழிந்துபட, சிற்பங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதனால் பழங்காலத்தில் சிற்பங்கள் மட்டுமே இருந்தன என்ற மாயை நம் மனதில் உருவாகியிருக்கிறது. ஆலயங்களில் சுவரோவியங்களும் இடம் பெற்றன. சொல்லப்போனால் அக்காலத்தில் சிற்பங்களை விட ஓவியங்களே மிகுந்திருந்தன. இலக்கியத்தில் சிற்பங்களைவிட ஓவியம் பற்றிய குறிப்புகளே நிறைய உள்ளன. ஆனால், இன்று வெகு சில ஓவியங்கள் மட்டும் காணக் கிடைக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x