Last Updated : 03 Aug, 2023 06:16 AM

 

Published : 03 Aug 2023 06:16 AM
Last Updated : 03 Aug 2023 06:16 AM

ப்ரீமியம்
நிறைவேறுமா பேராசிரியர் கனவு?

தமிழ்நாட்டில் இன்றைக்கு ஏறத்தாழ 70,000 பேர் அரசுக் கல்லூரியில் நிரந்தரப் பேராசிரியர் பணிக்காகக் காத்திருக்கிறார்கள். கௌரவ விரிவுரையாளரகளாக, தனியார் கல்லூரிப் பேராசிரியர்களாக, தனியார் பள்ளி ஆசிரியர்களாக,சுயதொழில் செய்வோராக, இன்ன பிற வேலைகளுக்குச் செல்பவர்களாக வாழ்க்கையை ஓட்டியபடி இப்பணிக்காக அவர்கள் தவம் கிடக்கிறார்கள். 2009, 2013 ஆண்டுகளின் நிரந்தரப் பணிகள் ‘சோளப்பொரி’ என்றாகிவிட்ட நிலையில், தேர்தலை முன்வைத்தாவது 2019இல் நடந்துவிடும் என்று பலரும் நம்பியிருந்தார்கள். ஆனால், பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் அதுவும் கானல் நீரானது.

நிரந்தரமற்ற வாழ்க்கை: எழுத்துத் தேர்வு முறையில் தான் பணி நியமனமா என மூத்தவர்கள் வருந்துகிறார்கள். இளம் பேராசிரியர்களோ எழுத்துத் தேர்வை எதிர்பார்க் கின்றனர். அதேநேரம், அவர்களிலும் பலர் ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் பணி அனுபவத்தை எட்டிவிட்டனர். அரசுக் கல்லூரிக் கௌரவ விரிவுரையாளர்களோ தங்களுக்கான நிரந்தரப் பணி கோரிக்கையை நம்பிக்கொண்டிருக்கின்றனர். பணி அனுபவ மதிப்பெண் இவர்களுக்கு மட்டுமா, அனைவருக்குமா என்றொரு கேள்வியும் நிலவுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x