Last Updated : 25 Jun, 2023 07:12 AM

 

Published : 25 Jun 2023 07:12 AM
Last Updated : 25 Jun 2023 07:12 AM

ப்ரீமியம்
எழுத்தாளர் ஆனேன்: நண்பன் மாட்டிவிட்ட வாய்ப்பு! - ராஜேஷ்குமார்

படித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். நான் எழுத்தாளன் ஆனது உண்மையிலேயே ஒரு விபத்துதான். கோவை அரசுக் கல்லூரியில் நான் இளங்கலை அறிவியல் படித்துவந்த காலத்தில் நிகழ்ந்தது அது. நான் கதைகள் படிக்கிற ஆள் இல்லை. ‘குமுதம்’, ‘விகடன்’கூடப் பார்ப்பேனே தவிர, ஊன்றிப் படித்தது இல்லை. 1968இல் மூன்றாம் ஆண்டு படித்துவந்தபோது கல்லூரி ஆண்டு மலருக்கு மாணவர்களிடம் படைப்புகள் கேட்கப்பட்டன.

அப்போது தமிழ்த் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் மீனாட்சிசுந்தரம், கவிதைகள் பலரும் கொடுத்துவிட்டார்கள். அதனால் யாராவது கதை எழுதிக் கொடுங்கள் எனக் கேட்டார். அப்போது என் அருகிலிருந்த நண்பன் என்னை மாட்டிவிடுவதற்காக “சார், இவன் நல்லா கதை எழுதுவான்” எனச் சொல்லிவிட்டான். அவரும் “நாளை வரும்போது ஒரு கதை எழுதிக் கொண்டுவா” எனச் சொல்லிவிட்டார். எனக்குக் கதை எழுதத் தெரியாது என நான் சொன்னதை அவர் நம்பவில்லை. மறுநாள் கதை இல்லாமல் சென்றபோது, அவர் கோபப்பட்டார். “கதை இல்லாமல் கல்லூரிக்கு வர வேண்டாம்” எனச் சொல்லிவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x