Published : 18 Jun 2023 07:58 AM
Last Updated : 18 Jun 2023 07:58 AM
கஸ்தூரி என்ற பெயருடைய வானொலியின் முன்னாள் இயக்குநர் ஒருவர் முதுமையின் காரணமாக 2020இல் காலமானார். 1950களில் சேவையாற்றியவர் என்பதால், என்னைப் போன்ற இந்தத் தலைமுறை வானொலிப் பணியாளர்களுக்கு அறிமுகம் இல்லாதவர். அவர் அலெக்ஸாண்டர் பிளமிங்கைக் கொண்டு நிகழ்ச்சி ஒலிபரப்பியவர் என்கிற குறிப்பு கிடைத்தது. அந்தச் வேளையில் வெளிவந்த ‘வானொலி’ இதழ்களை நூலகத்திலிருந்து தேடிப்பிடித்தோம். அலெக்ஸாண்டர் பிளமிங், ஆன்டிபயாட்டிக்ஸ் (Anti biotics) என்கிற தலைப்பில் பேராசிரியர் வி.ஈஸ்வரய்யாவுக்கு 15 நிமிட நேரத்துக்கு ஆங்கிலத்தில் நேர்காணல் அளித்திருந்தார். அந்த நேர்காணல் 17 மார்ச் 1953 அன்று இரவு ஒன்பதரை மணிக்கு சென்னை நிலையத்திலிருந்து ஒலிபரப்பாகும்; விஜயவாடா நிலையமும் அஞ்சல் செய்யும் என்னும் தகவல் ‘வானொலி’ இதழில் பதிவாகியிருந்தது கிடைத்தது. எழுபது ஆண்டுகளுக்கு முன் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சியைப் பற்றித் துல்லியமாக அறிய முடிகிறது எனில், அதற்கு ‘வானொலி’ இதழே காரணம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT