Last Updated : 09 Jun, 2023 06:20 AM

 

Published : 09 Jun 2023 06:20 AM
Last Updated : 09 Jun 2023 06:20 AM

ப்ரீமியம்
அவதூறு வழக்குகள்: ஒரு பகுப்பாய்வு

அரசியல் தலைவர்கள் மீது எதிர்க்கட்சியினர் ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இயல்பு. பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது அரசியல் தலைவர்கள் அவற்றைச் சட்டபூர்வமாக எதிர்கொள்வதைப் பார்க்க முடிகிறது. சமீபத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்மீதும் திமுக தலைவர்கள்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்தபோது, அவருக்கு எதிராக திமுகவினர் சார்பில் அவதூறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. சரி, அவதூறு என்பது எப்படி வரையறுக்கப்படுகிறது?

ஒரு சாதாரண மனிதரின் பார்வையில் ஒரு நபரின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் யாரேனும் அவரைப் பற்றிய தவறான கருத்துகளைத் தெரிவித்தால், அது அவதூறு எனக் கருதப்படுகிறது. ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே, தெரிந்தே வெளியிடப்பட்ட அல்லது பேசப்படும் எந்தவொரு தவறான அறிக்கையும் அவதூறாகும். இந்த அவதூறு சிவில் சட்டம் அல்லதுகுற்றவியல் சட்டத்தின்கீழ் ஒரு குற்றமாகக் கருதப்படலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x