Published : 08 Jun 2023 06:18 AM
Last Updated : 08 Jun 2023 06:18 AM

ப்ரீமியம்
பெருங்கடல் பாதுகாப்பு ஏன் அவசியம்?

படங்கள்: எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்

பெருங்கடல்களும் கடல்களும் புவியின் மேற்பரப்பில் 70% அளவுக்குப் பரவியிருக்கின்றன. மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனின் பெரும்பகுதியைக் கடல்களே உருவாக்குகின்றன; கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கின்றன, காலநிலையை ஒழுங்குபடுத்துகின்றன, ஆயிரக்கணக்கான மீன்பிடி, கடலோரச் சமூகங்களின் வாழ்வாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் இன்றியமையாதவையாக உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் இருந்தும், கடல்களும் அவற்றின் வளங்களும் பல்வேறுநெருக்கடிகளுக்கு உள்ளாகின்றன; பல அச்சுறுத் தல்களை நாள்தோறும் எதிர்கொள்கின்றன.

கடலும் கழிவும்: ஐக்கிய நாடுகள் அவையின் உணவு - வேளாண்மை அமைப்பின் (FAO) அறிக்கையின்படி, உலகின் கடல் வளங்களில் 30% தற்போது அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்பட்டுவருகின்றன; அல்லது மாசுபடுதல், அதிகப்படியான மீன்பிடித்தல், கடலில் வீசப்படும்-எறியப்படும்-அறுந்துபோகும் வலைகளில் தற்செயலாகச் சிக்கி உயிரினங்கள் இறந்துபோதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் கடலின் இயல்பில் மாற்றம் ஏற்படுகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x