Published : 07 Jun 2023 06:12 AM
Last Updated : 07 Jun 2023 06:12 AM
கோடை விடுமுறை முடிந்து பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும் சூழலில் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் ஆகியவற்றில் பொது சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானதாகும். இவை விபத்துகள், நோய்த் தொற்றுகளைத் தடுப்பதுடன் மாணவர்களும் ஆசிரியர்களும் அதிக நேரம் செலவிடும் இவ்விடங்களில் சுமுகமான சூழலை ஏற்படுத்திக் கற்றலை இனிமையாக்கும். அரசுக் கல்வித் துறை மட்டுமின்றி, சமூக அமைப்புகள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளும் இதற்கான முயற்சிகளை எடுப்பது நலம்.
பள்ளி-கல்லூரிக் கட்டிடங்களின் உறுதித்தன்மையை உள்ளாட்சித் துறைப் பொறியாளர்கள் உதவியுடன் கண்டறிய வேண்டும். உறுதித்தன்மையற்ற கட்டிடங்கள் அகற்றப்படுவது முக்கியம். சுற்றுப்புறத்தை நன்கு ஆய்வுசெய்து பாம்பு, தேள், எலி போன்ற உயிரினங்கள் இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். தேன்கூடுகள் அகற்றப்பட வேண்டும். சுற்றுப்புறங்களில் நாய்கள், ஆடு-மாடுகளின் நடமாட்டம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT