Last Updated : 05 Jun, 2023 06:15 AM

 

Published : 05 Jun 2023 06:15 AM
Last Updated : 05 Jun 2023 06:15 AM

ப்ரீமியம்
சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 4: மார்செல் மாஸ்: ஈதல், இசைபட வாழ்தல்

மார்செல் மாஸ் [Marcel Mauss 1872-1950], பிரெஞ்சு சமூகவியல் சிந்தனையாளர். இவரது தாய்மாமனும் ஆசிரியருமான எமில் தர்கைம் [Emile Durkheim 1858-1917] மற்றொரு புகழ்பெற்ற சமூகவியல் அறிஞர் ஆவார். மானுடச் சமூகங்களின் கட்டமைப்பு எப்படி உருவானது என்ற கேள்வியை எழுப்பும் சமகால சமூகவியல், மானுடவியல் சிந்தனைகளை எடுத்துக்கொண்டால் எமில் தர்கைம், மாக்ஸ் வெபர் [Max Weber 1864-1920], கார்ல் மார்க்ஸ் [Karl Marx 1818-1883] ஆகிய மூவரும்தான் அவற்றுக்கான வேறுபட்ட, அதே சமயம் விரிவான உரையாடலைக் கட்டமைக்கும் சிந்தனைச் சட்டகங்களை வழங்கியவர்கள் எனக் கருதப்படுகிறது.

மார்செல் மாஸின் புகழ்பெற்ற நூல், The Gift: Forms and Functions of Exchange in Archaic Societies [1925]. தமிழில் ஈகை, கொடை, தானம், பரிசு எனப் பல சொற்கள் அதற்கு ஈடாக உள்ளன. மாஸ் எழுப்பும் கேள்விகளுக்குப் பொருத்தமாக ஈகை என்ற சொல் இருப்பதாக நினைக்கிறேன். குறிப்பாக, ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்ற வள்ளுவர் குறள் முக்கியமானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x