Published : 25 May 2023 06:23 AM
Last Updated : 25 May 2023 06:23 AM

ப்ரீமியம்
காஷ்மீரில் ஜி20 கூட்டம்: ஜனநாயகமும் துளிர்க்கட்டும்!

ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக, சுற்றுலா தொடர்பான மூன்றாவது பணிக்குழுக் கூட்டம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மே 22 தொடங்கி 24 வரை நடைபெற்றது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது சட்டக்கூறு நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் எனும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகக் காஷ்மீர் மாநிலம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் பாகிஸ்தான், சீனாவின் எதிர்ப்பு காரணமாகவும், சில நாடுகள் பங்கேற்காததன் காரணமாகவும் ஸ்ரீநகர் ஜி20 கூட்டம் பேசுபொருளாகியிருக்கிறது.

ஜி20 அமைப்பு முன்னணி நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பாகக் கருதப் படுகிறது. அனைத்து உறுப்பு நாடுகளும் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி கொண்டவை. அந்த வகையில், 2022 டிசம்பர் 1 முதல் இதன் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. அதன் அடிப்படையில், ஜி20 மாநாட்டின் சில அமர்வுகள் காஷ்மீரில் நடத்தப்படும் எனக் கடந்த ஆண்டே செய்திகள் வெளியாகின.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x