Published : 05 Mar 2023 08:22 AM
Last Updated : 05 Mar 2023 08:22 AM

ப்ரீமியம்
தமிழ் எழுத்துகளில் பெண்ணியம்

தமிழில் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பெண்கள் எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், பெண்கள் தங்கள் உலகத்தைப் படைப்பு களுக்குள் வைத்தது பிறகுதான் நடந்தது. பெண்ணியம் என்கிற சித்தாந்தம் இயல்பான கதைகளில், கவிதை களில் வெளிப்படத் தொடங்கியது. இந்த வரிசையில் முக்கியமானவர் அம்பை. தமிழில் இவர் உருவாக்கிய சிந்தனைப் பள்ளியின் தொடர்ச்சி என இன்றைக்கு வரை தொடரும் பெண் எழுத்தாளர்களைச் சொல்லலாம்.

அம்பை, 1944இல் கோயம்புத்தூரில் பிறந்தவர். பதின்ம வயதில் எழுதத் தொடங்கினார். தன் எழுத்துகளைத் தானே மதிப்பிட்டுத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டார். ஆடுகளும் மாடுகளும் லட்சக்கணக்கான சிற்றுயிர்களும் ஆண்களும் வாழும் இந்தச் சமூகத்தில் பெண்களின் இடம் என்ன என்கிற கேள்வியை அவர் தன் கதைகளின் மையமாகக் கொண்டார். சாமானியப் பெண்களின் நிலையை அவர்களுக்கு அருகில் சென்று பதிவுசெய்துள்ளார். சொல்லும் தொனியில் இயல்பை உறுதிப்படுத்தினார் அம்பை. தங்கள் வாழ்க்கையில் அமிழ்ந்திருக்கும் பெண்களின் கள்ளங்கபடத்தை அழகாகத் தன் கதைகளில் வெளிப் படுத்தினார். இவருக்கு 2021ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x