Published : 30 Nov 2022 06:45 AM
Last Updated : 30 Nov 2022 06:45 AM

ப்ரீமியம்
ஆர்டர்லி முறை: உடனடியாகக் களைவது கட்டாயம்!

மத்திய ரிசர்வ் பாதுகாப்பு வீரர்களை (சிஆர்பிஎஃப்) வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி, ஆர்டர்லி முறையைப் பின்பற்றும் சிஆர்பிஎஃப் உயரதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முத்து என்கிற சிஆர்பிஎஃப் வீரர், ஆர்டர்லி முறையைப் பின்பற்ற மறுத்ததால், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துப் பணிநீக்கம் செய்த உயரதிகாரிகளின் உத்தரவை ரத்துசெய்த உயர் நீதிமன்றம், அப்படிச் செய்த அதிகாரிகளின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகக் காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட்டில் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. அந்த உத்தரவு சிஆர்பிஎஃப் தொடர்பாகவும் நீண்டிருக்கிறது. மாநில காவல் துறைகள், மத்திய காவல் பணிகள் என வேறுபாடு இல்லாமல், ஆர்டர்லி முறை ஒரு வியாதியாகவே பரவியிருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. காலனிய எச்சங்களில் ஒன்றான ஆர்டர்லி முறை, இந்தியா 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையிலும் தொடர்வது வெட்கத்துக்குரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x