Published : 25 Nov 2022 06:51 AM
Last Updated : 25 Nov 2022 06:51 AM

ப்ரீமியம்
சூதாட்டமாக மாறிய கிரிப்டோ!

வினோத் கே.ஆறுமுகம்

கிரிப்டோ பரிமாற்ற நிறுவனமான எஃப்.டி.எக்ஸ். (FTX) சில நாட்களுக்குமுன் திவாலானது. அதன் நிறுவனர் சாம்-பேங்க்மேன் ஃபிரைடின் (சுருக்கமாக, SBF - எஸ்பிஎஃப்) சொத்து மதிப்பு, சுமார் 16 பில்லியன் டாலரிலிருந்து (இந்திய மதிப்பில் சுமார் 13 ஆயிரம் கோடி) ஒரே இரவில் பூஜ்யத்துக்கு வீழ்ந்தது. வீடியோ கேம்கள் விளையாடிக்கொண்டே பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதித்த எஸ்பிஎஃப், ஒரு காலத்தில் ‘கிரிப்டோவின் எதிர்காலம்’ என வர்ணிக்கப்பட்டவர். விளையாட்டுப் பிள்ளையின் நிறுவனம், கிரிப்டோவின் எதிர்காலத்தை இன்று கேள்விக்குறியாக்கிவிட்டது.

‘கிரிப்டோ பரிமாற்றம்’ என்பது ஒருவர் பணம் கொடுத்து கிரிப்டோகரன்சியை விலைக்கு வாங்கும் நிறுவனமாகும். அப்படியான ஒரு ‘பரிமாற்ற’ நிறுவனம்தான் எஃப்.டி.எக்ஸ். அவர்கள் வெளியிட்ட கிரிப்டோ டோக்கன்களையும் வாங்குபவர்களுக்கு, அந்த நிறுவனத்தின் லாபத்தில் பங்கு கிடைத்திருக்கும். அந்த டோக்கன்கள் இன்று செல்லாக் காசாகிவிட்டன. இதனால் பல கிரிப்டோகரன்சிகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. எஃப்.டி.எக்ஸ். பயனாளிகளின் காணாமல்போன பணம் மீண்டும் கிடைக்குமா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x