Published : 11 Oct 2022 06:45 AM
Last Updated : 11 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
‘தீப்பொறி’ வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வருமா?

திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு இரண்டாவது முறையாக அப்பொறுப்பை ஏற்றுள்ளார். திமுக-வின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்த இந்தக் கூட்டத்தில், ஸ்டாலின் ஆற்றிய உரை கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல என் நிலைமை உள்ளது’ என்று அவர் தன் வருத்தத்தைக் கொட்டியுள்ளார். ‘என்னை மேலும் துன்பப்படுத்துவதுபோல திமுக நிர்வாகிகள், மூத்தவர்கள், அமைச்சர்கள் நடந்துகொண்டால் என்ன செய்வது? காலையில் எழுந்ததும் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்சினையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைவோடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னைத் தூங்க விடாமல்கூடச் செய்துவிடுகிறது. பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட முறை காரணமாக திமுக, பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது. நம் வீட்டின் கழிவறை, படுக்கை அறை தவிர, அனைத்தும் பொது இடமாகிவிட்டது. மொபைல் போன் மூன்றாவது கண்போலாகி விட்டது. எனவே, உங்கள் ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாகப் பயன்படுத்த வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x