Published : 06 Oct 2022 06:45 AM
Last Updated : 06 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
புதிய வலதுசாரி அரசு நெருக்கடிகளிலிருந்து இத்தாலியை மீட்குமா?

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இத்தாலியில் செப்டம்பர் 25 அன்று நிறைவடைந்த பொதுத்தேர்தலில் ‘தி பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ தலைமையிலான வலதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியில், தீவிர வலதுசாரி அரசாங்கம் ஒன்று ஆட்சியைப் பிடித்திருப்பதும், பெண் ஒருவர் பிரதமராகத் தேர்வாகியிருப்பதும் இதுவே முதல்முறை. இது ஐரோப்பிய அரசியலில் மட்டுமின்றி, உலக அரசியலிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் ஜியோர்ஜியோ மெலோனி தலைமை வகிக்கும் கட்சி 26% வாக்குகளைப் பெற்றிருக்கிறது; இந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த ‘லீக்’ கட்சி 8.78% வாக்குகளையும் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையிலான ‘ஃபோர்சா இத்தாலி’ கட்சி 8.12% வாக்குகளையும் பெற்றுள்ளன. 400 இடங்களைக் கொண்ட இத்தாலிய நாடாளுமன்றத்தில் 237 இடங்களை இந்தக் கூட்டணி கைப்பற்றியுள்ளது. மெலோனியின் கட்சி தனித்து 114 இடங்களை வென்றுள்ளது; மேலவையின் 200 இடங்களில் 112 இடங்கள், இக்கூட்டணியின் வசமாகியுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x