Published : 14 Sep 2022 06:51 AM
Last Updated : 14 Sep 2022 06:51 AM
பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறார். மணிபால் மருத்துவமனையில், இரைப்பை, குடல் அறுவைசிகிச்சை மருத்துவராகப் பணியாற்றிவரும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட நிலையில் காரிலிருந்து இறங்கி 3 கி.மீ தூரம் ஓடி மருத்துவமனையை அடைந்தார்.
அவர் சாலையில் வேகமாக ஓடிய காட்சிகள் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டுவருகின்றன. மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு அவசரமாக அறுவைசிகிச்சை செய்ய நேரம் குறிக்கப்பட்டிருந்த நிலையில், காலம் தாமதிக்காமல் ஓடிச் சென்று வெற்றிகரமாக அந்த அறுவைசிகிச்சையைச் செய்து முடித்திருக்கிறார். உயிர் காக்கும் கடவுளாகப் போற்றப்படும் மருத்துவர்கள், தங்களது பணியில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான முன்னுதாரணமாகிவிட்டார் கோவிந்த் நந்தகுமார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT