Published : 30 Jun 2022 07:41 AM
Last Updated : 30 Jun 2022 07:41 AM

இப்படிக்கு இவர்கள்: மொழிப் பாடங்களைப் புறக்கணிக்கக் கூடாது!

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் சிறப்பாகச் சொல்லப்படுவது வெற்றி, தோல்வி கிடையாது என்பதே. பள்ளிப் படிப்பு முடிந்தது என்ற அறிவிக்கை மட்டுமே. கல்லூரிப் படிப்புக்குத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பல்கலைக்கழகமும், அரசுப் பணியில் சேர்வதற்குப் பணியாளர் தேர்வாணையமும் நிர்ணயிக்கின்றன.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஆங்கிலத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பத்து பிரிவேளைகளுக்கு மேல் ஆங்கிலத்துக்கு ஒதுக்கப்பட்டது. இன்று மொழிப் பாடங்கள் பின்தள்ளப்பட்டு கணிதம், அறிவியல் பாடங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பேசுவதைவிட படித்துப் புரிந்துகொள்வதே ஆங்கிலம் கற்பதன் நோக்கமாயிற்று. இன்றைய காலகட்டத்தில் பிற அறிவுகளுக்கான‌ ஜன்னலாகவே ஆங்கிலம் உள்ளது.

- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சென்னை - 93.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x