Published : 30 May 2016 12:31 PM
Last Updated : 30 May 2016 12:31 PM

கடைசி அறுவைச் சிகிச்சை

திமுகவினரைத் தாண்டி, சாதாரண மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே ‘கருணாநிதி செய்ய வேண்டிய கடைசி அறுவைச் சிகிச்சை!’ கட்டுரை அமைந்திருந்தது. ஆட்சியில் இல்லாதபோதும் திமுகவைக் கட்டிக் காத்தவர் என்ற பெருமை கருணாநிதிக்கு உண்டு. ஆனால், எந்த ஒரு நல்ல நிகழ்வும் எப்போதாவது ஒரு முடிவுக்கு வந்தே ஆக வேண்டும் என்பதே நியதி. கருணாநிதி தன் 75-வது வயதிலேயே அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தை மாற்றிவிட்டு, சரியாகச் செயல்படுகிறதா எனக் கண்காணித்திருக்க வேண்டும்.

இனியாவது அவர் அதைச் செய்வாரா? ஏற்கெனவே, சட்டப்பேரவை திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சில கட்சிகளில் உள்ளதைப் போல ஸ்டாலினைக் கட்சியின் செயல் தலைவராக்கி, கருணாநிதி அரசியலுக்கு வெளியிலிருந்து கட்சியை வழிநடத்துவதே அவர் இனி செய்ய வேண்டிய முதற்காரியமாகும். அப்போதுதான், கட்சியில் உள்ள பழம் பெருச்சாளிகளைத் தள்ளிவைத்து, கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்ச முடியும்.

- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x