Published : 19 Jun 2022 06:05 AM
Last Updated : 19 Jun 2022 06:05 AM

ப்ரீமியம்
வானவில் அரங்கம் | இசைக் கிராமம்: இசைதான் இவர்களின் பெயர்!

‘இராஜபாளையம்' உமாசங்கர்

‘அரிஞ்சிகைக் காமரப் பேரையன்’ என்று சிறப்புப் பெயர் பெற்ற இசைப் பாணரைப் பற்றிய கல்வெட்டு ஆதாரம் ஒன்று உண்டு. காமரப் பண் பாடுவதில் வல்லுநராக இருந்துள்ளார் என்பது இவரது சிறப்புப் பெயரால் தெரியவருகிறது. (மருதநிலச் சிறுபண் - காமரம், இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது). இவ்வாறாக, எந்த ராகத்தில் மூழ்கி ஒருவர் முத்தெடுக்கிறாரோ அந்த ராகத்தையே பெயரோடு இணைத்துச் சொல்கிற மரபு அந்தக் காலத்திலேயே இருந்துள்ளதை அறியலாம். அடாணா ராகத்தை அசாத்தியமாகப் பாடியதால் ‘அடாணா’ அப்பய்யர், நாகசுரத்தில் தோடி வாசித்து எல்லோரையும் கசிந்துருக வைத்ததால் ‘தோடி’ ராஜரத்தினம் பிள்ளை, நாராயண கௌளை ராகம் பாடுவதில் தேர்ந்து விளங்கியதால் ‘நாராயண கௌளை’ குப்பய்யர், பேகடா இசைத்துப் புகழ்பெற்ற ‘பேகடா’ சுப்ரமணிய ஐயர் என்று பிற்காலத்திலும் ராகத்தை அடிப்படையாக வைத்துச் சிறப்புப் பெயர் பெற்ற மரபு தொடர்ந்துகொண்டே இருந்தது. (‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தின் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை எனும் கதாபாத்திரத்தை இங்கே நினைவுகூரலாம்).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x