Published : 12 Jun 2022 10:56 AM
Last Updated : 12 Jun 2022 10:56 AM
தஞ்சைப் பெரிய கோயிலில் கடந்த பத்தாண்டுகளாக சித்திரைப் பெருவிழாவை யொட்டி நடைபெறும் ‘சின்னமேளம்’ நாட்டிய நிகழ்ச்சி ஏனோ இம்முறை வழக்கத்தைவிடவும் கூடுதலாகக் களைகட்டியிருந்தது. பெருந்தொற்றின் காரணமாகக் கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்படாமலிருந்த அந்நிகழ்ச்சி, இம்முறை சற்று முன்னதாகவே தொடங்கி, சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
முதல் நாள் நிகழ்ச்சியில் விருந்தினர்களையும் ரசிகர்களையும் வரவேற்றுப் பேசிய ஹேரம்பநாதனின் குரல், வழக்கம் போலன்றி சற்றே சோர்வுற்றிருந்தது. தஞ்சை நால்வர் என்றழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோரின் சிறப்பு குறித்து விரிவாகப் பேச நினைத்திருந்தவர், விரைவாகவே தனது உரையை முடித்துக்கொண்டு, நாட்டிய மங்கைகளுக்கு வழிவிட்டு அமர்ந்தார். இவ்வாண்டின் ‘சின்னமேளம்’ நிகழ்ச்சி முடிந்த சில வாரங்களிலேயே (10 மே 2022) காலத்துடன் கலந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT