Published : 31 May 2022 07:57 AM
Last Updated : 31 May 2022 07:57 AM

ப்ரீமியம்
‘சோத்து பெல் எப்போ அடிக்கும் மிஸ்?’

ம.ஜெயமேரி

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள காலை உணவுத் திட்டத்தை வரவேற்கும் அரசுப் பள்ளி ஆசிரியை நான். காலை உணவு ஏன் அவசியம் என்பதைக் களத்தில் தினந்தோறும் பார்த்த அனுபவங்கள் பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உண்டு. எனக்கு இதில் கூடுதல் அனுபவங்கள் கிடைத்தன என்றே சொல்லலாம். காரணம், நான் பணிபுரியும் பள்ளி... கந்தகபூமி… பட்டாசு நகரமான சிவகாசி அருகே உள்ள கிராமம். இந்தப் பகுதி முழுவதும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள்.

காலையிலேயே பெற்றோர் வேலைக்குச் செல்லும் நிலை. முதல் நாள் வைத்த கஞ்சிதான் உணவு. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கொண்டது எங்கள் பள்ளி. இரண்டாம் வகுப்பு ஆசிரியர் நான். ஒரு நாள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தேன். 12 மணி இருக்கும். தட்டை எடுத்துக்கொண்டு “சோத்து பெல் எப்போ அடிக்கும் மிஸ்?” என்று கேட்ட குழந்தையை உற்றுநோக்குகிறேன். சீவப்படாத தலை, ஒட்டிய வயிற்றுடன் கண்கள் பசியை உணர்த்துகின்றன. “காலையில சாப்பிடல... அம்மா வெள்ளென வேலைக்குப் போயிட்டாங்க” என்றவனின் குரல் என்னை உலுக்கியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x