Published : 05 May 2016 11:44 AM
Last Updated : 05 May 2016 11:44 AM

தொடரட்டும் பணி

சிகரம் தொடும் அரசுப் பள்ளி செய்தி மனதை நெகிழவைத்தது. “சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எங்களை எப்படியாவது படிக்கவைக்கணும்னு அப்பா உறுதியா இருந்தார். எங்களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்க உதவச் சொல்லி, ஊர்ல இருக்கற பெரிய மனுஷங்ககிட்டே எங்கப்பா கையேந்தி நின்னது இன்னும் அப்படியே என் கண் முன்னால நிக்குது” என்று, தன் இளவயது வறுமையைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் இந்திரா, அன்று தன்னையொத்த நிலையில் இன்று இருக்கும் மாணவ - மாணவிகளுக்கு உதவுவது பெருமைக்குரியது.

ஆசிரியர் இந்திராவின் செயல்பாடு ஜப்பான் மொழி நாவலான ‘டோட்டாசா’னில் வரும் தலைமை ஆசிரியர் ‘சோசாகு கோபயாஷி’யை நினைவுபடுத்தியது. அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவ - மாணவிகள் சேர்ந்த நிலை மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும்.

- வா.நேரு, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x