Last Updated : 26 May, 2022 06:49 AM

 

Published : 26 May 2022 06:49 AM
Last Updated : 26 May 2022 06:49 AM

ப்ரீமியம்
ஆஸ்திரேலியத் தேர்தல்: புதிய நம்பிக்கை

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு மே 21 அன்று தேர்தல் நடைபெற்றது. அன்றிரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அடுத்த நாள் வெளியான முடிவுகள் ஆளும் லிபரல் கட்சிக்கு (வலதுசாரி) சாதகமாக இல்லை. அதே வேளையில், எதிரணியில் முன்னேறிக்கொண்டிருந்த தொழிற் கட்சி தனிப் பெரும்பான்மை பெறுமா என்பதும் ஐயமாக இருந்தது. எனினும், பிரதமர் ஸ்காட் மோரிசன் பதவி விலகினார்; லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் துறந்தார்.

மூன்றாம் நாள், அதுகாறும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஆண்டனி அல்பனேசே ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராகப் பதவியேற்றார். நான்காம் நாள் அவர் டோக்கியோவுக்குப் பயணமானார். அங்கேதான் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பான நாற்கரத்தின் (Quad) மாநாடு நடக்கிறது. புதிய பிரதமரை ஜோ பைடன் வரவேற்றார். அப்போதும் 70% வாக்குகளே எண்ணப்பட்டிருந்தன. தொழிற் கட்சி பெரும்பான்மைக் கோட்டுக்கு அருகில் இருந்தது; கோட்டைத் தாண்டவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x