Published : 23 May 2022 07:10 AM
Last Updated : 23 May 2022 07:10 AM

ப்ரீமியம்
புத்துயிர் பெறுமா காங்கிரஸ்?

கு.பாஸ்கர்

காங்கிரஸ் கட்சியின் மாநாடு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட அகில இந்திய செயற்குழுத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், கட்சியின் அடிமட்டத் தலைவர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர். நேரு குடும்பத்தின் தலைமையிலேயே காங்கிரஸ் தொடர வேண்டுமா, இல்லை அதற்கு வெளியே புதிதாக ஒரு தலைவர் உருவாகி வர வேண்டுமா என்ற கேள்விகளுக்கு இடையேதான் இந்த மாநாடு கூடியது.

இதற்கு முன் கடந்த ஏழு வருடங்களாக ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கட்சியை ஓரளவு தாங்கிப் பிடித்துக்கொண்டே வந்தார்கள். அவர்களின் எந்த வியூகமும் எடுபடாமல் போனது. இதற்கு பாஜகவுக்குப் பிரதானப் பங்கு உண்டென்றாலும், பிராந்தியக் கட்சிகள் பலவும் காங்கிரஸைப் பெரிதாக மதிக்காததும் ஒரு காரணம். ஆட்சி அதிகாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ருசி கண்டுவிட்ட இந்தக் கட்சிகள், தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்துகொள்ளும் தகுதிகளை வளர்த்துக்கொண்டுவிட்டன. அந்தக் கட்சிகளுக்கு காங்கிரஸ் தற்போது தேவைப்படவில்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் கலாச்சாரத்தை உள்வாங்கிக்கொண்டு, அதே பாணியில் ஒருபக்கம் அரசியலை நடத்திக்கொண்டும் இன்னொரு பக்கம் அதிதீவிர இந்துத்துவக் கொள்கையைச் செயல்படுத்தியும் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x