Published : 22 May 2022 10:12 AM
Last Updated : 22 May 2022 10:12 AM

ப்ரீமியம்
மு.சி.பூர்ணலிங்கம்: ஜஸ்டிஸ் இதழிலிருந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரை

சே.சோ.இராமஜெயம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய முக்கியமான தமிழ் அறிஞர்களுள் மு.சி.பூர்ணலிங்கமும் (1866-1947) ஒருவர். தமிழ் நாகரிக வரலாற்றையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு, தமிழின் பெருமையை அயல்நாட்டார் அறியச் செய்த ஆங்கிலப் பேராசிரியர் மு.சி.பூர்ணலிங்கம்.

திருநெல்வேலிக்கு அருகே உள்ள முந்நீர் பள்ளம் என்ற கிராமத்தில் சிவசுப்பிரமணியம் - வள்ளியம்மை தம்பதியினருக்கு 1866, மே மாதம் 24-ம் தேதி பூர்ணலிங்கம் பிறந்தார். தனது தந்தையின் ஆசிரியரான செல்லப் பெருமாளிடமே இவரும் திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்றார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மேலப்பாளையம் பள்ளியில் சுந்தரம் என்ற ஆசிரியரிடம் இலக்கணமும் திருக்குறளும் ஆழமாக கற்றுத்தேர்ந்தார். அடிப்படைத் தமிழ் அறிவினைப் பெற்ற பெருமகனார் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ள தருவை என்ற கிராமத்தில் அமைந்திருந்த பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் பயின்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x