Published : 19 May 2022 07:11 AM
Last Updated : 19 May 2022 07:11 AM

ப்ரீமியம்
இலங்கையை ரணில் மீட்பாரா?

எம்.ரிஷான் ஷெரீப்

கடந்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கையில் மிக முக்கியமான அரசியல் மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்‌ச, கடந்த ஒன்பதாம் திகதி பதவி விலகியதைத் தொடர்ந்து, இரண்டு தினங்கள் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் நாட்டில் வன்முறைகள் வெடித்தன. வீடுகளும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டதோடு, உயிர்ச் சேதமும் ஏற்பட்டது.

தெருக்களில் பல ராணுவ வாகனங்கள், ஆயுதம் தரித்த படையினரோடு உலாவந்துகொண்டிருந்ததோடு, அரச கட்டளைகளை மீறும் எவரையும் பார்த்த இடத்தில் சுட்டுத்தள்ளும் அதிகாரம் ராணுவத்துக்கும் காவல் துறைக்கும் வழங்கப்பட்டிருந்தது. கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டாகோ’ கிராமத்தில் அமைதியாகப் போராடிக்கொண்டிருக்கும் பொதுமக்கள் உடனடியாக அவ்விடத்திலிருந்து நீங்க வேண்டும் என்று காவல் துறை ஒலிபெருக்கி வழியாக அறிவித்ததுமே, அருட்சகோதரிகளும் பௌத்த பிக்குகளும் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்துகளும் நேராத வண்ணம் காவல் துறையும் ராணுவமும் பிரவேசிக்கக்கூடிய வழிகளில் காவல் தேவதைகளாக இரவு முழுவதும் அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x