Published : 15 May 2022 09:34 AM
Last Updated : 15 May 2022 09:34 AM

ப்ரீமியம்
புலிட்சர் விருது ஏன் கவனம் ஈர்க்கிறது?

இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறப்புப் புகைப்பட (Feature Photography) பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நால்வருக்கு விருது கிடைத்திருக்கிறது. அத்னன் அபிதி (புதுடெல்லி), சன்னா இர்ஷத் மட்டூ (காஷ்மீர்), அமித் தவே (அகமதாபாத்), டேனிஷ் சித்திக்கி (புதுடெல்லி). இவர்கள் நால்வரும் அமெரிக்கச் செய்தி நிறுவனமான ‘ராய்ட்டர்’ஸின் ஒளிப்படச் செய்தியாளர்கள். கரோனா காலகட்டத்தில் இந்தியச் சூழலைக் காட்சிப்படுத்தியதற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

டேனிஷ் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஆப்கன் ராணுவத்துக்கும் தாலிபான்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தைப் பதிவுசெய்வதற்காக ஆப்கானிஸ்தான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவருக்கு இது இரண்டாவது புலிட்சர் விருது. அத்னன் அபிதிக்கு இது மூன்றாவது புலிட்சர். ரோஹிங்கியா முஸ்லிம்களின் அவலநிலையைக் காட்சிப்படுத்தியதற்காக டேனிஷ் சித்திக்கிக்கும் அத்னன் அபிதிக்கும் 2018-ல் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவிலிருந்து ஒளிப்படப் பிரிவில் புலிட்சர் விருது பெற்ற முதல் இந்தியர்கள் என்ற பெருமை அவர்களுக்கு உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x