Last Updated : 14 May, 2022 10:08 AM

 

Published : 14 May 2022 10:08 AM
Last Updated : 14 May 2022 10:08 AM

ப்ரீமியம்
திராவிட இயக்கத்தின் செம்முழக்கம்

திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான க.அன்பழகன், மே தின விழாக்களில் கலந்துகொண்டு ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. ஒரு மணி நேர உரையை எழுத்து வடிவில் அப்படியே கட்டுரையாகவும் வாசிக்கலாம் என்ற வால்டேர் பாணி சொற்பொழிவுகள் இவை. தமிழ்நாட்டில் மே தினக் கொண்டாட்டத்தை முன்னெடுத்தது சுயமரியாதை இயக்கமே என்ற பெருமிதத்துடன், உலகளவில் உழைப்பாளர்கள் எதிர்கொண்ட சுரண்டலையும் அனுபவித்த துயரங்களையும் அதிலிருந்து மீள மேற்கொண்ட போராட்டங்களையும் இவ்வுரைகள் நினைவூட்டுகின்றன. இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் மே தினத்தைக் கொண்டாடித் தொழிற்சங்கத்தை வளர்த்தெடுத்த சிங்காரவேலரையும் திரு.வி.க.வையும் விதந்துரைக்கும் இந்த உரைகள், பிரிட்டிஷ் ஆட்சியில் தொழிற்சங்க நடவடிக்கைக்காக திரு.வி.க. நாடு கடத்தப்படவிருந்த நிலையில், அவருக்கு ஆதரவாக அன்றைய நீதிக்கட்சி அமைச்சரவை செயல்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றன. சுயமரியாதை இயக்கம் தொழிலாளர் உரிமை இயக்கமாகவும் விளங்கியதை மாநாட்டுத் தீர்மானங்களை உதாரணமாக்கி விவரிக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x