Published : 12 May 2022 07:02 AM
Last Updated : 12 May 2022 07:02 AM

ப்ரீமியம்
ஓய்வூதியத் திட்டம்: தேர்தலுக்கு முன்பு திமுகவுக்குத் தெரியாதா?

பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த இயலாமைக்கு நிதியமைச்சர் அளித்துள்ள விளக்கங்கள் அரசு ஊழியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுக தனது 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த முக்கியமான உறுதிமொழிகளில் அதுவும் ஒன்று. பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற தனித் தலைப்பின் கீழ், வரிசை எண் 309-ல் இடம்பெற்றிருந்த இந்த வாக்குறுதி, தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக முன்வைக்கப்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலின்போதும் திமுக இந்த வாக்குறுதியை அளித்திருந்தது. அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் என்ற தலைப்பில், 16-வது அத்தியாயத்தில் இடம்பெற்றிருந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவரவும் ஓய்வூதிய நிதி மற்றும் வருங்கால வைப்புநிதிகளைப் பங்குச் சந்தையிலும் தனியார் நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யக் கூடாது எனவும் திமுக பரிந்துரை செய்யும் எனத் தெரிவித்திருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x