Published : 08 May 2022 08:50 AM
Last Updated : 08 May 2022 08:50 AM

ப்ரீமியம்
சி.சு.செல்லப்பாவின் சிறார் உலகம்!

சி.சு.செல்லப்பா படைப்புகள் எழுத்துப் பிரசுரம், சென்னை-40. விலை: ரூ.650 தொடர்புக்கு: 8925061999

விஷ்ணுபுரம் சரவணன்

மலையாள இலக்கியத்தில் பெரியவர்களுக்கான படைப்புகளில் தீவிரமாக இயங்கியவர்கள் சிறார் இலக்கியத்திலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனால், தமிழில் அப்படியான நிலை இல்லை என்ற வருத்தம் பலருக்குமே உண்டு. ஆயினும் விதிவிலக்காக, கு.அழகிரிசாமி, கிருஷ்ணன் நம்பி உள்ளிட்டோர் சிறார் ஆக்கங்களையும் படைத்துள்ளனர். அந்த வரிசையில், சி.சு.செல்லப்பாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது. ‘வாடிவாசல்’ உள்ளிட்ட நாவல்கள், சிறுகதைகள் சிலாகிக்கப்பட்ட அளவு, அவரின் சிறுவர்களுக்கான கதைகள் கவனிக்கப்படவில்லை.

சி.சு.செல்லப்பாவின் ஒட்டுமொத்தப் படைப்புகள் வெளியானதில், குழந்தைகளுக்கான கதைகள் எனும் பிரிவில் 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 1977-ல் அவர் எழுதிய முன்னுரை ஒன்றில், “ ‘நீர்க்குமிழி’, ‘பழக்க வாசனை’ என்ற இரண்டு சிறு தொகுப்புகளை இளம் சிறுவர்களும் படிக்கத்தக்கதாக இருக்கும் சிறுகதைகள் அடங்கியிருக்கும் வகையில் வெளியிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆக, சிறாருக்கான படைப்புகள் என்ற பிரக்ஞையோடு அவர் எழுதியிருப்பது உறுதியாகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x