Published : 25 Apr 2022 07:48 AM
Last Updated : 25 Apr 2022 07:48 AM

ப்ரீமியம்
சித்த மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் வேண்டும்!

பாரம்பரிய மருத்துவத் துறையின் வளர்ச்சியில் மத்திய அரசு காட்டிவரும் அக்கறை வரவேற்புக்குரியது. இது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்டுள்ள சில முயற்சிகள் பரவலான பாராட்டுகளைப் பெற்றுவருகின்றன. ஏப்ரல் 19 அன்று, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவச் சிகிச்சைகளில் பன்மைத்துவச் சூழலுக்கான உரையாடலை நிகழ்த்துவது இம்மையத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அதையடுத்து, காந்திநகரில் நடந்த இந்தியப் பாரம்பரிய மருத்துவத் துறை கண்டுபிடிப்புகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான மாநாட்டிலும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். பாரம்பரிய சிகிச்சை பெற வருகைதரும் அயல்நாட்டுப் பயணிகளுக்கான விசா நடைமுறைகள் எளிதாக்கப்படும், பாரம்பரிய முறையிலான மருந்துகளுக்கு தரக் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை இம்மாநாட்டில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x