Published : 24 Apr 2022 05:45 AM
Last Updated : 24 Apr 2022 05:45 AM

ப்ரீமியம்
வானவில் அரங்கம் | குடவாயில் பாலசுப்ரமணியன்: பெருமங்கலத்து அருந்தச்சன்

ரவிசுப்பிரமணியன்

கும்பகோணத்தில் நான் பிறந்திருந்தாலும் கோயில்களின் சூழலிலேயே வளர்ந்திருந்தாலும் அதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை அறியாதிருந்தேன். முழுமையாய் அறிந்திராதோர் சொல்லும் தகவல்களே சதம் என்றிருந்தேன். சென்னைக்குக் குடிபெயர்ந்த பின், இவற்றையெல்லாம் முன்னே தெரிந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கம் என்னைத் துளைத்தது. அப்போது தேனுகா தந்த குடவாயில் பாலசுப்ரமணியன் கட்டுரைகளே, எனக்கு அள்ளஅள்ளக் குறையாத சுரங்கமாய் விவரங்களைத் தந்தன. ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கண்திறப்பையும் அவை எனக்குத் தந்தன.

அவரை நேரில் பார்க்கும் துடிப்பு இருந்துகொண்டே இருந்தது. டி.என்.ராமச்சந்திரனைப் பற்றிய ஆவணப்படத்தை இயக்கிக்கொண்டிருந்த காலத்திலேயே, பாலசுப்ரமணியனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தப் படப்பிடிப்பின்போது நான் எழுப்பிய சின்னச்சின்னக் கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்களில் அவரின் மேதமை வெளிப்பட்டபடியே இருந்தது. வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சிற்பம், கட்டிடக்கலை, ஓவியம், இசை, நாட்டியம், நாணயவியல், பக்தி இலக்கியம், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் எனக் குறுக்கும் நெடுக்குமாய் அவர் பயணித்திருந்த விஸ்ரூப சொரூபத்தை அந்தப் பதில்களில் கண்டேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x