Published : 05 May 2016 11:38 AM
Last Updated : 05 May 2016 11:38 AM

மகிழ வைத்த மலர்

‘தி இந்து’வின் சித்திரை மலர் முழுதும் ஒவ்வொரு பக்கமாய் அனுபவித்துப் படித்து மகிழ்ந்தேன். ‘ஒரு நிலம்.. இரு மொழி’யில் தமிழ், மலையாள மொழிக்கு உள்ள தொடர்பைத் தக்க எடுத்துக்காட்டு களுடன் சொல்லியவிதம் மனதில் நின்றது. கொக்கலிக்கட்டை ஆட்டம் பற்றிய தகவலை முதன்முதலாகப் படித்து அறிந்துகொண்டேன்.

எங்கள் ஊர் திருவிழா மிகமிக அருமையான புகைப்படங்களோடும், மண்ணின் மணத்தோடும் அதன் பெருமை கூறி எங்கள் மனதில் முதல் இடத்தைப் பெற்றுவிட்டது. பறவைகளைப் பற்றிய செய்திகள் ,கலைகள், திரைப் படம் என எண்ணிலடங்கா பகுதிகளைத் தந்து எங்களை மகிழ்ச்சி அடைய வைத்தது ‘சித்திரை மலர்’!

- பானு பெரியதம்பி, சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x