Published : 15 Apr 2022 12:01 PM
Last Updated : 15 Apr 2022 12:01 PM

ப்ரீமியம்
மனோபாவ மாற்றமே எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும்

காலநிலை மாற்றம் - இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய, ஒற்றைப் பிரச்சினை. 21-ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் காலநிலை மாற்றத்தின் மிகச் சிறிய முன்னோட்டத்தை மட்டுமே இதுவரை நாம் பார்த்திருப்பதால், அதன் முழு வீச்சு குறித்து நமக்குத் தெரியவில்லை. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாகக் காலநிலை மாற்றம் குறித்த தனது மதிப்பீட்டு அறிக்கைகளால் ஐ.பி.சி.சி. (காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு) அறிவியல்ரீதியில் வெளிச்சம் பாய்ச்சிவருகிறது. அந்த அமைப்பின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் ஒரு பகுதியாகக் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான தனது பரிந்துரை அறிக்கையை மூன்றாவது ஆய்வுக் குழு கடந்த வாரம் வெளியிட்டது. காலநிலை மாற்றத்தைத் தடுத்துநிறுத்த முடியாவிட்டாலும், என்ன மாற்றங்களை மேற்கொண்டால் குறைந்தபட்சம் மட்டுப்படுத்தவாவது முடியும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x