Published : 19 Apr 2016 10:44 AM
Last Updated : 19 Apr 2016 10:44 AM

உண்மையின் பிரதிபலிப்பு

திருமாவளவனின் நேருக்கு நேர் சிறப்புப் பேட்டியில், அவருடைய பதில்கள் கருத்துச் செறிவானதாகவும், தெளிவான கண்ணோட்டத்துடன் கூடியதாகவும் மற்றும் உண்மையின் பிரதிபலிப்பாகவும் இருந்தது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என இந்தியாவின் பெருமை பேசும் நாம், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ முழுச் சுதந்திரத்துடன் செயல்பட இயலாத நிலை இப்போதும் தொடரும் நிலை கவலைக்குரியது.

தமிழகத்தில் 2005 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் 11,000 தலித்கள் நிலமற்றவர்களாக மாறியுள்ள இந்தத் தருணத்தில், விசிகவின் துணைநிலை அமைப்புகளான நிலவுரிமை விழிப்புணர்வு இயக்கம் மற்றும் கல்வி, பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் போன்றவற்றின் அவசியம் உணரப்படுகிறது. இது போன்று மற்ற கட்சித் தலைவர்களின் நேர்காணலுக்குக் காத்திருக்கிறோம்.

- சு.செந்தில்ராஜன், செம்போடை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x