Published : 15 Apr 2016 02:09 PM
Last Updated : 15 Apr 2016 02:09 PM

புலியின் முக்கியத்துவம்

புலிகள் இருப்பதுதான் காடுகள் செழிப்பாக இருக்கின்றன என்பதற்கான ஆதாரம் என்பதை ‘புலிகள் பாதுகாப்பில் வெளிப்படைத்தன்மை தேவை!’ எனும் தலையங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது. புலிகளுக்கு உணவாகும் பிராணிகளைப் பாதுகாப்பதில் கவனம், வனப் பகுதிகளில் மனிதர்களின் குறுக்கீட்டைத் தடைசெய்வது, வேட்டையாடுதலைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் புலிகளின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது நமக்குப் பெருமை அளிக்கும் செய்தி.

- எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x