Published : 05 Apr 2016 11:30 AM
Last Updated : 05 Apr 2016 11:30 AM

கோரிக்கை வெல்லட்டும்!

என்ன செய்ய வேண்டும் எனக்கான அரசு பகுதியில் வெளியான, ‘கல்வியை இலவசமாக்குங்கள்’ என்ற கோரிக்கை வெல்ல வேண்டும். இதுதொடர்பாகச் சில கோரிக்கைகள் இன்னும் இருக்கின்றன. அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளியில் மட்டுமே படிக்க வைக்கச் சட்டம் இயற்ற வேண்டும். அல்லது அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும். கல்வி வியாபாரத்தைத் தடுக்கும் வகையில் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். கட்டாயம் அனைத்துப் பள்ளிகளிலும் கணினி வழிக் கல்விக்கும், கலையியல் ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். தரமான கல்வியை இலவசமாகப் பெற முடியும் என்ற நிலை வந்தால்தான் தரமான மனிதவளம் கொண்டநாடாக இந்தியா உருவாகும்.

- கூத்தப்பாடி மா.கோவிந்தசாமி, தருமபுரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x