Last Updated : 04 Mar, 2016 09:54 AM

 

Published : 04 Mar 2016 09:54 AM
Last Updated : 04 Mar 2016 09:54 AM

வேர்கள்: இது எம்ஜிஆர் தொடங்குன கட்சி!

மதுரையில் எம்ஜிஆர் படம் போட்ட தியேட்டர் வாசலில் முதல் ஆளாக இன்றும் நிற்பவர் எஸ்.குமார். “எம்ஜிஆர் போட்டுருந்த சட்டை, பாடுற பாட்டை வெச்சித்தான் திமுகவும், அண்ணாவுமே எங்களுக்குத் தெரியும். அவரக் கட்சியவிட்டு நீக்குனதோட நில்லாம, அவரோட படத்துக்கும் கட்டைய குடுத்தாய்ங்க.

‘உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளிய வந்தா, நான் சேலையக் கெட்டிக்கிறேன்’னு மதுரை மேயர் முத்து சொன்னாரு. அடியாட்களையும், போலீஸையும் வெச்சித் தடுத்தாங்க. அவங்க எம்ஜிஆருக்குப் பண்ணுன கொடுமைய தாங்க முடியாம, நான் தீவிர அதிமுககாரனாகிட்டேன். இப்ப வரைக்கும் எம்ஜிஆர்னா எங்களுக்கு உசுரு.

அன்னைக்கு இருந்த அதிமுக வேற, இன்னைக்கு இருக்கிற அதிமுக வேறன்னு யாராவது சொல்லும்போதும், கட்சி போஸ்டர்ல எம்ஜிஆர் படம் இல்லாம இருக்கிறதப் பாக்கும் போதும் கொஞ்சம் கஷ்டமாத்தாம் இருக்கும். ஆனா, இந்தக் கட்சி சோதனையான கட்டத்துல இருந்தப்ப, அதைக் காப்பாத்துனது அம்மாதாம். எம்ஜிஆர் தந்த சின்னத்தையும், கட்சியையும் கட்டுக்கோப்பா காப்பாத்துறது அம்மா. சாமானியனையும் எம்எல்ஏ, மந்திரியாக்கி அழகு பார்க்கிற ஒரே கட்சி அதிமுகதான். எம்ஜிஆர் கையில இருக்குற ரெட்டை விரல் மாதிரி நானும் கட்சியும். உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் என்னைய கட்சியில இருந்து பிரிக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x