Published : 21 Mar 2016 10:17 AM
Last Updated : 21 Mar 2016 10:17 AM

‘அப்பச்சி சாமி’ பெருங்கட்டுரை: ஆரம்பமே அமர்க்களம்

‘அப்பச்சி சாமி’ பெருங்கட்டுரை படித்தேன். தேர்தலில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கப் பயணப்படும் வேளையில், முதல்வர் என்றால் இவர்தான் என உதாரணம் கூறும் அப்பச்சி ‘காமராஜர்’ இல்லத்திலிருந்து பயணத்தைத் தொடங்கியதிலிருந்தே கட்டுரையின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியின் வரியை அப்படியே நிறைவேற்றியவர் காமராஜர் என்பதை அவர் செயல்படுத்திய நீர்ப்பாசனத் திட்டங்கள், தொடங்கிய தொழிற்சாலைகளில் இருந்தே தெரியவருகிறது. அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல, செயல்பாடே முக்கியம் என்பதைக் குறைந்த அமைச்சர்களைக் கொண்டே நிரூபித்தவர் அவர். தொடரின் ஆரம்பமே அமர்க்களம். தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளது.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x