Published : 28 Mar 2016 11:36 AM
Last Updated : 28 Mar 2016 11:36 AM

வருத்தத்துக்குரிய செயல்பாடு

மிகச் சிறந்த கம்யூனிச சிந்தனைவாதிகள் வாழ்ந்த.. வாழும் தமிழகத்தில் தற்போது கம்யூனிச சித்தாந்தங்களின் தோல்விக்கான புரிதலைச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார் கட்டுரையாளர். பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்த போராட்டங்களை முன்னெடுத்து நடத்துபவர்கள், தேர்தல் சமயங்களில் ஒவ்வொரு முறையும் தங்கள் நோக்கத்தில் தடுமாறி பல்லக்குத் தூக்க முனைப்புக் காட்டுகிறார்கள்.

தனிநபர் துதியே அரசியல் சித்தாந்தம் என்று நிலவும் தமிழகத்தில், இதை வளர்த்தெடுத்ததில் கம்யூனிஸ்ட்களின் பங்கு அளவுக்கு அதிகமானது. நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் சித்தாந்தப்போக்கு, சினிமாக்காரன் போக்காகிவிட்டது என்பது வருத்தத்துக்குரிய செயல்பாடு.

- விளதை சிவா, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x