Published : 21 Mar 2016 09:28 AM
Last Updated : 21 Mar 2016 09:28 AM

இயற்கை விவசாயிகளின் பிரதான கோரிக்கைகள் என்ன?

* இயற்கை வேளாண்மைக்கென தமிழகத்தில் தனியான கொள்கை வகுக்கப்பட வேண்டும். இயற்கை வேளாண்மைக்கு என்று தனியான துறையும் தொடங்க வேண்டும்.

* ரசாயன உரங்களால் மண்வளம் கெட்டுவிட்டது. மண்வளத்தை மீட்டெடுக்கப் பசுந்தாள் உரச் செடிகளின் விதைகளைப் பெருமளவில் இலவசமாக வழங்க வேண்டும்.

* இயற்கை வேளாண்மைக்கான உரத்தை விவசாயிகளே தயாரிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான மானியத்தை மாநில அரசு ரொக்கமாக வழங்க வேண்டும்.

* இயற்கை விளைபொருட்களை முதல்கட்டமாக அரசு மருத்துவமனைகள், விடுதிகள், அங்கன்வாடிகளின் பயன்பாட்டுக்காக அரசே கொள்முதல் செய்தால், விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும்.

* இயற்கை இடர்பாடுகளைத் தாங்கி வளரக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து, அவற்றைச் சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

* ஒரு விவசாயி ஒரு நாட்டு பசுமாடு வைத்திருந்தால், அவரால் ஒரு ஆண்டுக்கு 32 ஏக்கருக்குத் தேவையான இயற்கை உரம் தயாரிக்க முடியும். பால் மட்டுமல்லாது கோமியம், சாணம் ஆகியவை வேளாண்மைக்குத் தேவைப்படுவதால் கால்நடை வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x