Published : 18 Feb 2016 10:39 AM
Last Updated : 18 Feb 2016 10:39 AM

சமூகத்தின் குரல்

எதிர்வரும் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ‘தி இந்து’ ஆற்றப் போகும் பணிகள் குறித்த முன்னோட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. மக்களின் குரலை எதிரொலிப்பதில் ‘தி இந்து’ எப்போதுமே முன்னிற்கிறது. இந்த முறையும் அதில் மாற்றம் இல்லை. குறிப்பிட்ட மக்களின் குரலாக இல்லாமல் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் எதிர்பார்ப்பையும் பதிவுசெய்வதில் மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் அரசியல் கட்சிகளும் அந்தந்தப் பகுதி பிரச்சினைகளில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்குத் தெரியப்படுத் தலாம். வழக்கமான தேர்தல் கட்டுரைகளில் இருந்து மாறுபட்ட வடிவில் வந்துகொண்டிருக்கும் ‘தேர்தல் திருவிழா - 2016’ கட்டுரை கள் அரசியல் கட்சிகளுக்கும் பயனு ள்ளதாக இருக்கும் என்பது திண்ணம்!

- ரா. பொன்முத்தையா, தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x