Published : 01 Feb 2016 11:10 AM
Last Updated : 01 Feb 2016 11:10 AM

இந்தியாவின் மணிமகுடம்!

ரசாயன உரங்களால் சிக்கித் தவிக்கும் இந்தியாவில், இயற்கை வேளாண்மையில் முதலாவதாக வந்து சாதனை புரிந்த சிறிய மாநிலம் சிக்கிம், இந்தியாவுக்கு மணிமகுடம் சூட்டிவிட்டது. இந்திய அளவில் உங்களோடு இருப்பதில் பெருமைப்படுகிறோம், முதல்வர் பவன் குமார் சாம்லிங் அவர்களே.

பெரிய மாநிலம், சிறிய மாநிலம் என்பது விஷயமல்ல, மாநில மக்களுக்காக என்ன செய்கிறோம், அதை எப்படிச் சாதித்தோம் என்பதுதானே செய்தி. பிற மாநில, தமிழக வேளாண் துறை அமைச்சர்களும் சிக்கிமுக்குச் சென்று பார்வையிட்டு, நம் மாநிலத்தில் இயற்கை வேளாண்மையை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று சிந்தியுங்கள்.

- சாமி. குணசேகர், அம்மாசத்திரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x