Published : 12 Dec 2015 10:39 AM
Last Updated : 12 Dec 2015 10:39 AM

பயம் எனும் நஞ்சு

‘கொல்வது பயம்’ கட்டுரை அருமை. பயம் எனும் ஒரு துளி நஞ்சு நம்மை மட்டும் கொல்லாது, நம்மைச் சார்ந்தவரையும் கொல்லும் இயல்புடையது. நம் பயத்தைப் பிறர் மீது திணிப்பதில் அலாதி பிரியம் மனிதர்களுக்கு. அதிகாரத்துக்கு அஞ்சுதலே பயத்தின் வேர்.

செகாவ் எழுதிய ‘தும்மல்’ என்ற சிறுகதையில் மேலதிகாரியின் மீது எதேச்சையாக ஒரு ஊழியன் தும்மிவிட்டு, அந்தப் பயத்தில் இறுதியில் இறந்தே விடுவான். தற்காலத்திய மக்களின் பயத்தை ஒவ்வொரு நிகழ்விலும் காணலாம். பயத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பவனை வீரன் என்றும் வெளிப்படுத்துபவனைக் கோழை என்றும் கூறுவர்.

சமுதாயத்தில் நடக்கும் அநியாயத்தை எதிர்க்காமல் பயத்தால் சுருண்டு கிடக்கும் மக்களைப் பற்றி அன்றே பாரதி பாடிய வரிதான் ‘ரௌத்திரம் பழகு’.

- ப. மணிகண்டபிரபு, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x