Published : 02 Dec 2015 03:07 PM
Last Updated : 02 Dec 2015 03:07 PM

‘கவனம்’கவனிக்கப்படுகிறது!

‘கவனத்தின் உயிர்ச்சூழல்’ கட்டுரையை மிகவும் கவனத்துடன் படிக்காவிட்டால் அதிலுள்ள முக்கியமான கருத்துகளை உள்வாங்கிக்கொள்ள முடியாது என்பதை, அதை இரண்டாவது முறையாகப் படிக்கும்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.

‘ஒரு பொருளைத் தயாரிப்பதில் ஆரம்பித்து, அதை விளம்பரப்படுத்தி விற்பனை செய்வதுவரை கவனமாகக் கையாள வேண்டும்’என்பது தொடங்கி, ‘கவனம் ஒன்று எப்போதும் அனிச்சையாக 360 டிகிரி கோணத்தில் விழிப்புடன் செயல்படுகிறது’என்பது வரை கவனத்தின் செயல்பாடுகளை விவரமாக அலசப்பட்டிருக்கிறது. இதுவரை யாரும் அதிகம் கவனிக்காத ‘கவனம்’ இதன்மூலம் கவனிக்கப்பட்டிருக்கிறது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x