Published : 25 Dec 2015 10:59 AM
Last Updated : 25 Dec 2015 10:59 AM

அரசியல் அத்துமீறல்!

அருணாசலப் பிரதேசத்தில் அரசியல் அத்துமீறல் என்ற தலையங்கம் படித்தேன். ஆளுநர் என்பவர் மக்களுக்கும் ஆளும் கட்சிக்கும் ஓர் இணைப்புப் பாலம் போன்றவர். மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை அலங்கரிக்கும் பதவியில் இருப்பவர். ஆனால், இன்றோ மத்திய அரசு ஆளும் கட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர், எதிர்க் கட்சி ஆளும் மாநிலத்தில் கண் கொத்திப் பாம்பாகச் செயல்பட்டு வருவதைக் காண முடிகிறது. பல கட்சி ஆட்சி முறையும் கூட்டாட்சி முறையும் ஆளுநரின் பணியை அடியோடு மாற்றியிருக்கிறது என்ற உண்மையை நாம் உணர வேண்டும். இது ஜனநாயக மாண்புகளைக் களங்கப்படுத்துவதோடு மட்டுமல்ல மக்கள் அரசின் மீதுள்ள நம்பிக்கையைக் கெடுத்து போராட்டங்கள், புரட்சி என்ற மன நிலைக்கு இட்டுச் செல்லும்.

- வெ. சிவ ஆனந்த கிருஷ்ணன்,களக்காடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x