Published : 02 Dec 2015 03:18 PM
Last Updated : 02 Dec 2015 03:18 PM

தேர்வுக்குக் கைகொடுக்கிறது

மத்திய அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்குத் தயார் செய்து வருகிறேன். அதற்காக ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை விரும்பிப் படிக்கிறேன். தென்காசியை அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்த எனக்கு பத்திரிகை வாசிப்புதான் தேர்வாணையத் தேர்வுகளை எழுதும் தன்னம்பிக்கையை ஊட்டியது. இதற்கு முன்னர் வாசித்த நாளிதழ்களில் திரைப்படங்களைப் பற்றியும் பயன்படாத விஷயங்கள் பற்றியும் அதிகம் இருந்ததால் பொது அறிவு மேம்பட உதவவில்லை.

இப்போது பல்வேறு துறைகள் தொடர்பான கட்டுரைகளைப் படித்து, விரிந்த பார்வையைப் பெற முடிகிறது. இப்பத்திரிகை இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இன்னும் விரைவாகவே தயாராகியிருப்பேன். நல்ல புத்தகங்களை விலைகொடுத்து வாங்கிப் படிக்க முடியாத என் போன்ற கிராமவாசிகளான மாணவர்களுக்கும் பெண்களுக்கும் உங்கள் நாளிதழ் நல்விருந்தாக அமைந்திருக்கிறது. தெளிவாகவும் தரமாகவும் கட்டுரைகளைத் தரும் உங்கள் பணி தொடர, வாசகர் என்ற முறையில் வாழ்த்துகிறேன்.

- சிவமுருகன், தென்காசி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x