Published : 03 Dec 2015 01:30 PM
Last Updated : 03 Dec 2015 01:30 PM

சென்னை வாசகர் திருவிழா!

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற ‘தி இந்து’வாசகர் திருவிழாவுக்கு பாராட்டு. தமிழ் பதிப்பு வந்த நாளிலிருந்து அதன் தீவிர வாசகராக இருந்துவருகிறேன். எனது அபிமான பத்திரிகையைத் தாய் மொழியில் வாசிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசிரியர் குழு நல்ல செய்திகளைத் தரமுடன், சுவையாக மக்களுக்குத் தருகிறது. வாசகர்களின் பங்களிப்பான ‘வாசகர் கருத்துச் சித்திரம்’, ‘பஞ்ச்சோந்தி பராக்’, ‘ஆனந்தஜோதி’, ‘வாக்களிக்கலாம் வாங்க’ போன்றவை ‘தி இந்து’வை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே திறம்படக் கொண்டு சேர்க்கிறது. சமீப காலமாக கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்தது மற்ற நாளிதழ்கள் இதுவரை செய்யாத புதுமை.

- டி. ராம்மோகன், இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x